tamilnadu

img

ஆந்திர முன்னாள் அமைச்சர் இ.எஸ்.ஐ ஊழல் வழக்கில் கைது

தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அச்சன் நாயுடு, இ.எஸ்.ஐ. ஊழல் வழக்கில் கைது  செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த 2014 முதல் 2019 வரையில் இ.எஸ்.ஐ.  நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் உள்ளிட்டவை குறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து, அது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ரூ.150 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்ததாக ஊழல் தடுப்பு பிரிவின் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அச்சன் நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், இ.எஸ்.ஐ. நிறுவனத்தின் இணை இயக்குனர் ஜனார்தன், கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, மூத்த உதவியாளர்  இ.எஸ்.ஐ. நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்களான சி. ரவிகுமார்,  ஜி. விஜயகுமார் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.